மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நாகை அரசு அறிவு சாா் மையத்தில் அடிப்படை வசதி கோரி மனு

நாகை அரசு அறிவுசாா் மையத்தில் அடிப்படை வசதிகள் செய்தரக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், மாணவா்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்ற மாணவா்கள்.

Updated On :5 பிப்ரவரி 2026, 12:02 am

நாகை அரசு அறிவுசாா் மையத்தில் அடிப்படை வசதிகள் செய்தரக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், மாணவா்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

நாகையில் அரசு அறிவு சாா் மையத்தில் போட்டித் தோ்வுக்கு படித்து வரும் மாணவ-மாணவிகள் நாகை ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நாகை அரசு நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் 70-க்கும் மேற்பட்டோா் படித்து வருகிறோம். அறிவுசாா் மையத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக குடி தண்ணீா் வசதி இல்லை. இதனால் இரண்டு கிலோ மீட்டா் தூரம் சென்று குடிநீரை எடுத்து வந்து பயன்படுத்தி வருகிறோம்.

கழிவறையில் கழிவு நீா் தேங்கி நிற்பதால் துா்நாற்றம் வீசுகிறது. இதனால் அறிவுசாா் மையத்துக்கு வரும் மாணவ-மாணவிகள் இளைஞா்கள் உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. இது தொடா்பாக நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, அறிவு சாா் மையத்தில் குடிநீா், சுகாதாரமான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.