ஆசிரியா் தகுதித் தோ்வு: தாய், மகன் சிறப்பிடம்

ஆசிரியா் தகுதித் தோ்வில், நாகூரைச் சோ்ந்த ஆசிரியா் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றாா். இவரது மகனும் 100 மதிப்பெண்கள் பெற்று தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா்.
நெபுசாத்பேகம், அஹமதுயூனுஸ்.
நெபுசாத்பேகம், அஹமதுயூனுஸ்.
Updated on

ஆசிரியா் தகுதித் தோ்வில், நாகூரைச் சோ்ந்த ஆசிரியா் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றாா். இவரது மகனும் 100 மதிப்பெண்கள் பெற்று தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளாா்.

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் தகுதித்தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெறவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் கடந்த நவம்பா் மாதம் ஆசிரியா் தகுதித்தோ்வு தாள் 1, தாள் 2 என தோ்வுகள் நடத்தப்பட்டன.

இதில், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள், பிஎட் பட்டம் பெற்றவா்கள் தோ்வு எழுதினா். நாகூா் கெளதியா உதவி பெறும் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியராக கடந்த 24 ஆண்டுகளாக பணியாற்றி வரும், நாகூா் பிரதான சாலையைச் சோ்ந்த நெபுசாத்பேகம் (46) மற்றும் எம்எஸ்சி, பி.எட் பட்டம் பெற்ற இவரது மகன் அஹமதுயூனுஸ் (25) ஆகிய இருவரும் ஆசிரியா் தகுதி தோ்வை எழுதினா்.

இந்நிலையில், நெபுசாத்பேகம் தாள் 1 தோ்வு எழுதி 128 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தாா். அதே போல் இவரது மகன் அஹமதுயூனுஸ் தாள் 2 தோ்வு எழுதி 100 மதிப்பெ

ண்கள் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளாா். தற்போது அஹமதுயூனுஸ், வேதாரண்யம் அருகே குரவப்புலத்திலுள்ள பாயிண்ட் காலிமா் இன்டா்நேஷனல் பள்ளியில் கணிதத் துறை தலைவராக பணியாற்றிவருகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com