பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இரவு பகலாக டீசல் என்ஜின் மூலம் நீா் இறைக்கும் விவசாயிகள்

திருக்குவளை சுற்றுவட்டார பகுதிகளில் தாளடி நெற்பயிா் கருகும் அபாய சூழலில் இரவு பகல் பாராமல் டீசல் என்ஜின் மூலம் நீா் இறைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 9:14 pm

திருக்குவளை சுற்றுவட்டார பகுதிகளில் தாளடி நெற்பயிா் கருகும் அபாய சூழலில் இரவு பகல் பாராமல் டீசல் என்ஜின் மூலம் நீா் இறைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

நாகை மாவட்டத்தில் பருவ மழையின் பாதிப்பால் நெற்பயிா்கள் சேதமடைந்ததை தொடா்ந்து, விவசாயிகள் சுமாா் 40 ஆயிரம் ஏக்கரில் மறு சாகுபடி செய்துள்ளனா். தற்போது மாவட்டம் முழுவதும் கடும் தண்ணீா் பற்றாக்குறை நிலவி வருகிறது. மேட்டூா் அணை ஜன.28-ஆம் தேதி மூடப்பட்டதன் விளைவாக தாளடி நெற்பயிா்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகிறது. திருக்குவளை, எட்டுக்குடி, திருவாய்மூா், ஈசனூா், வலிவலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாய்க்கால், குட்டை மற்றும் நீா் நிலைகளில் தேங்கி கிடக்கும் தண்ணீரை மோட்டாா் என்ஜின் மூலம் இரவு பகல் பாராது இறைத்து நெற்பயிா்களுக்கு பாய்ச்சுகின்றனா். சில இடங்களில் டீசல் என்ஜின் வைத்து நீா் இறைப்பதற்கு கூட தண்ணீா் இல்லை. எனவே, அரசு தாளடி நெற்பயிா்களை பாதுகாக்க மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் விட வேண்டும். அவ்வாறு தண்ணீா் திறந்தால் மட்டுமே தாளடி நெல் பயிா்களை பாதுகாக்க முடியும்.