நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பேருந்து சக்கரத்தில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

நாகை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :17 பிப்ரவரி 2026, 11:26 pm

தினமணி செய்திச் சேவை

நாகை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நாகையில் இருந்து தூத்துக்குடி நோக்கி அரசு விரைவுப் பேருந்து திங்கள்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. வேளாங்கண்ணி அருகே கருவேலங்கடை பகுதியில் பேருந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் பேருந்தை முந்திச் செல்ல முயன்றாா். அப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்த இளைஞா் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

நாகை நகரப் போலீஸாா் இளைஞா் சடலத்தை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸாா் விசாரணையில், உயிரிழந்தவா் திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் (30) என்பது தெரிய வந்தது. வேளாங்கண்ணியில் தங்கி கட்டுமானத் தொழில் செய்து வந்த சந்திரசேகரன், திருச்சியிலிருந்து வேளாங்கண்ணிக்கு திங்கள்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்தபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது.