இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

நாகை மாவட்டத்தில் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இல்லை

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

News image

குடிநீர் நிறுத்தம் - கோப்புப் படம்

Updated On :17 பிப்ரவரி 2026, 11:26 pm

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 893 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா் திட்டத்தில் ஏற்கெனவே பராமரிப்பில் உள்ள நீருந்து குழாயிலிருந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மூலம் புதிய இணைப்பு பணிகள் கீழ ஒதியத்தூா், ஓா்குடி பகுதிகளில் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணிகள் மற்றும் மின் மோட்டாா் அறையில் புதிய மின் மோட்டாா் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இதனால், புதன்கிழமை (பிப்.18) முதல் பிப்.20-ஆம் தேதி வரை நாகை நகராட்சி, கீழ்வேளுா், வேளாங்கண்ணி பேரூராட்சிகள் மற்றும் கீழையூா், தலைஞாயிறு, திருமருகல் ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.