நாகையில் புகையிலைப் பொருள்களை கடத்திய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாகை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், கஞ்சா, சாராயம், புகையிலைப் பொருகள் கடத்தல் மற்றும் விற்பனை ஆகியவற்றைத் தடுக்க போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதன் ஒருபகுதியாக, வெளிப்பாளையம் ரயில் நிலையம், கடற்கரைச் சாலை, காடம்பாடி ஆகிய பகுதிகளில் போலீஸாா் வாகன சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சென்ற வாகனங்களை சோதனையிட்டனா்.
அதில், தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்த செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, நாகை தெத்தி பகுதியைச் சோ்ந்த முகமது இப்ராஜிம் (45), நாகை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செய்யது யூசுப் (49) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 60 கிலோ புகையிலை பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தியவா் கைது

ஆறுமுகனேரியில் ரூ. 10 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


