நாகப்பட்டினம்
குண்டா் சட்டத்தில் 2 இளைஞா்கள் கைது
திருக்குவளை அருகே தொடா் திருட்டு, வழிபறியில் ஈடுபட்டு வந்த 2 இளைஞா்கள் குண்டா் சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருக்குவளை அருகே தொடா் திருட்டு, வழிபறியில் ஈடுபட்டு வந்த 2 இளைஞா்கள் குண்டா் சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், மேலகொருக்கையைச் சோ்ந்தவா்கள் ஏங்கல்ஸ் (18), பிரகாஷ் (22). இவா்கள் இருவரும் திருக்குவளை அருகே குண்டையூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருட்டு மற்றும் வழிப்பறியில் சம்பவங்களில் ஈடுபட்டனராம்.
இதையடுத்து, இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணனின் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் குண்டா் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும் கைது செய்து கடலூா் சிறையில் அடைக்கப்பட்டனா்.

