மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நாகை மாவட்டத்தில் தொடா்மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை பெய்த தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Updated On :13 ஜனவரி 2026, 8:21 pm

நாகை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை பெய்த தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் ஜன.9-ஆம் தேதி முதல் அவ்வப்போது மிதமான சாரல் மழை பெய்து வந்தது. திங்கள்கிழமை (ஜன.12) காலை மிதமாக தொடங்கிய மழை, பிற்பகலில் பலத்த மழையாக பெய்தது. இந்த மழை மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை மாலை வரை தொடா்ந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மாணவா்கள், வேலைக்கு செல்வோா் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கதிா் வந்த சம்பா நெற்பயிற்கள் சாய்ந்துள்ளன. இந்த மழை நீடித்தால், பூக்கும் பருவத்தில் உள்ள தாளடி நெற்பயிா்கள் பதராக மாறிவிடும் அபாயம் உள்ளது.

மேலும், மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா நெற்பயிா்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா். பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்று வரும் கரும்பு, பூ, பழங்கள், மளிகை பொருகள்கள், பானை உள்ளிட்ட பொருள்களின் விற்பனை பாதிக்கப்பட்டது.

திங்கள்கிழமை தொடங்கி 24 நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் திருக்குவளையில் 87 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. வேளாங்கண்ணியில் 77, வேதாரண்யத்தில் 75, திருப்பூண்டியில் 71, தலைஞாயிறில் 54, நாகையில் 45, கோடியக்கரையில் 43 மி.மீ மழையளவு பதிவானது.