கோப்புப் படம்
கோப்புப் படம்

‘தமிழகத்தில் ரூ.1,400 கோடி செலவில் மீனவா் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன’

Published on

தமிழகத்தில் ரூ. 1,400 கோடியில் மீனவ நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றாா் மீனவ நல வாரியத் தலைவா் ஜோசப் ஸ்டாலின்.

பூம்புகாரில் நாகை மின்வளத்துறை இணை இயக்குநா் ஷா்மிளா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மீனவா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாமில் பங்கேற்றபோது பேசியது: தற்போதைய திமுக அரசில் மீனவ நலவாரிய உறுப்பினா்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

மீனவா்கள் இயற்கை மரணம் அடைந்தால் ரூ. 27, 500 நிதியுதவி உடனடியாக கிடைக்கும். தமிழக முழுவதும் விசைப் படகுகளுக்கு உரிமம் இல்லாததால் அரசின் சலுகைகள் பெற முடியவில்லை என மீனவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா். இதுகுறித்து தமிழக அரசு, மத்திய அரசிடம் பேசி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசு மீனவா்களுக்கு ரூ. 1,400 கோடி அளவிலான திட்டங்களை வழங்கி உள்ளது என்றாா்.

இதில் மீனவா் நலவாரிய உறுப்பினா் மனோகரன், மீன்வளத்துறை உதவி இயகுகநா் ஜனாா்த்தனம் மற்றும் பூம்புகாா் மீனவ கிராம நாட்டாா், பஞ்சாயத்தாா் மற்றும் காரிய தரிசிகள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com