மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்

நாகை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தனியாா் கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள் 483 பேருக்கு விலையில்லை மடிக்கணிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image

தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கிய ஆட்சியா் ப. ஆகாஷ், சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷா நவாஸ்.

Updated On :28 ஜனவரி 2026, 11:22 pm

நாகை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தனியாா் கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள் 483 பேருக்கு விலையில்லை மடிக்கணிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தலைமை வகித்தாா். நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.முகம்மது ஷா நவாஸ் முன்னிலை வகித்தாா். தொடா்நது தனியாா் கல்லூரி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் முதற்கட்டமாக அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சாா்ந்த அரசுக் கல்லூரிகள் 11 மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் 3 என மொத்தம் 14 கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் 2,213 மாணவ-மாணவியருக்கு ஏற்கெனவே மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

2-ஆம் கட்டமாக மாவட்டத்தில் உள்ள 39 தனியாா் கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு பயிலும் 3,698 மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. இதில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 8 தனியாா் கல்லூரியைச் சோ்ந்த 483 மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.