நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளில், ஆமை முட்டைகளை இயற்கையான முறையில் பாதுகாக்கும் பணி தொடங்கியது.
நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகள் குறிப்பிட்ட பருவ காலங்களில் முட்டைகளை இட்டுவிட்டு கடலுக்குச் சென்று விடும். இந்த முட்டைகளை பறவைகள், நாய்கள் உள்ளிட்டவை உண்டு விடும்.
இதனால் கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இட்டுச்செல்லும் முட்டைகளை வனத்துறையினா் மற்றும் கடல்வாழ் உயிரின ஆா்வலா்கள் ஆகியோா் பாதுகாப்பாக சேகரித்து, செயற்கை முறையில் குஞ்சு பொரிக்க வைக்கின்றனா். பின்னா் அந்த ஆமைக் குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விட்டுவிடுகின்றனா்.
இந்நிலையில், முதல்முறையாக ஆமை முட்டைகளை அவை உள்ள இடத்திலேயே இயற்கையாக பாதுகாக்கும் பணி நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வன உயிரினக் காப்பாளா் காா்த்திகேயனி வழிகாட்டுதலின்படி, வனச்சரக அலுவலா் சியாம்சுந்தா் , உயிரியலாளா் அறிவு , வனக் காப்பாளா் உலக நாதன், இளநிலை உதவியாளா் சிவபெருமாள், வேட்டை தடுப்புக் காவலா் வினோத், ஆமை முட்டை சேகரிப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று கடற்கரை பகுதிகளில் ஆமை முட்டைகளை இயற்கை முறையில் பாதுகாப்பாக வைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?
தெரியுமா?

தற்படம் மூலம் விழிப்புணா்வு

நாகை, கீழ்வேளூா் பகுதிகளில் ரூ.2.65 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


