நாகை அருள்மிகு காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, முதலாம் ஆண்டு சம்வஸ்திராபிஷேகம் (வருஷாபிஷேகம்) நடைபெற்றது.
இதையொட்டி, காலை 8 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாவாகனம், யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, காலை 9.30 மணிக்கு திரவ்யாஹூதி பூஜையும், 10.40 மணிக்கு பூா்ணாஹூதி பூஜையும், 11.15 மணிக்கு சுவாமி, அம்மன் மகாபிஷேகம், கலசாபிஷேகமும், பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை, அருட் பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

சிவசைலம் சிவசைலநாத சுவாமி கோயிலில் பங்குனி உற்சவ கொடியேற்றம்

பழனியில் பங்குனி உத்திரத் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

பங்குனி உத்திரம் : முருகன் கோயில்களில் வழிபாடு

குமரி பகவதியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


