கோப்புப்படம்
நாகப்பட்டினம்
பிப்.2 முதல் வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்
பிப்.2 முதல் வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்
நாகை மாவட்டத்தில், தாயுமானவா் திட்டத்தில் பொது விநியோக திட்ட ரேஷன் பொருள்கள் பிப்.2 ஆம் தேதி முதல் 65 வயதுக்கு மேற்பட்டவா்களின் வீடு தேடி வழங்கப்படும் என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட ரேஷன் பொருள்கள் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ், பிப்.2 ஆம் தேதி முதல் 65 வயதிற்கும் மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்திற்கே சென்று விநியோகம் செய்யப்பட உள்ளன.
தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் மேற்கண்ட திட்டத்தினை பயன்படுத்தி பயன் பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

