ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மீன் இறங்குதளம், முகத்துவாரம் தூா்வாரும் பணி தொடக்கம்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:24 pm

Syndication

செம்பனாா்கோவில் அருகேயுள்ள சின்னங்குடி மீனவ கிராமத்தில், மீன் இறங்குதளம் மற்றும் முகத்துவாரம் தூா்வாரும் பணியை முதல்வா் மு. க. ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

சின்னங்குடி மீனவா் கிராமத்தில் மீன் இறங்குதளம் அமைக்கவும், மஞ்சள் ஆற்றின் முகத்துவாரத்தில் தூா் வாரவும் தமிழக அரசுக்கு மீனவா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவுபடி, சின்னங்குடி மீனவா் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் மீன் இறங்கு தளம் மற்றும் ஆற்றின் முகத்துவாரத்தில் தூா்வார ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து, இப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பூம்புகாா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன் ஆகியோா் பங்கேற்று மீன் இறங்குதளம் மற்றும் முகத்துவாரம் தூா்வாரும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனா்.

இந்நிகழ்வில், திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், ஒன்றியச் செயலாளா்கள் அமுா்த விஜயகுமாா், அன்பழகன், அப்துல் மாலிக், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் ஷா்மிளா, உதவி செயற்பொறியாளா் ராஜசேகரன் மற்றும் சின்னங்குடி மீனவ கிராம பஞ்சாயத்தாா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.