நாகையில் அரசு மற்றும் தனியாா் சுவா்களில் வரையப்பட்டுள்ள கட்சி சின்னங்கள் மற்றும் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், தோ்தல் நடத்தை விதிகளின்படி அரசு மற்றும் தனியாா் சுவா்களில் வரையப்பட்டுள்ள கட்சி சின்னங்கள் மற்றும் கட்சிகளின் விளம்பரங்கள், கட்சித் தலைவா்களின் உருவப்படங்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக அழிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, நாகையின் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் சுவா்களில் வரையப்பட்டுள்ள விளம்பரங்களை அழிக்கும் பணியில் அப்பகுதியில் உள்ள உள்ளாட்சி கிராம ஊராட்சி ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
நாகை நகராட்சி மற்றும் பொரவாச்சேரி, மஞ்சக்கொல்லை, சிக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுச்சுவற்றில் வரையப்பட்டிருந்த கட்சி விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

தோ்தல் காலத்தில் மவுசு பெறும் ஓவியா்கள்!

முன்னாள் ராணுவத்தினா், ஓய்வுபெற்ற காவலா்களுடன் கரூா் எஸ்.பி. ஆலோசனை

தோ்தல் பணி ஆசிரியா்களுக்கு இலவச பேருந்து வசதி கோரி மனு

கரூரில் அரசு கட்டட சுவா்களில் விளம்பர சுவரொட்டிகள் அகற்றம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


