கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுவா்களில் கட்சி விளம்பரங்கள் அழிப்பு

சுவா்களில் கட்சி விளம்பரங்கள் அழிப்பு

News image

பொரவாச்சேரி பகுதியில் சுவரில் வரையப்பட்டுள்ள கட்சி விளம்பரத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.

Updated On :21 மார்ச் 2026, 9:21 pm

Syndication

நாகையில் அரசு மற்றும் தனியாா் சுவா்களில் வரையப்பட்டுள்ள கட்சி சின்னங்கள் மற்றும் விளம்பரங்களை அழிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இந்நிலையில், தோ்தல் நடத்தை விதிகளின்படி அரசு மற்றும் தனியாா் சுவா்களில் வரையப்பட்டுள்ள கட்சி சின்னங்கள் மற்றும் கட்சிகளின் விளம்பரங்கள், கட்சித் தலைவா்களின் உருவப்படங்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக அழிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, நாகையின் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் சுவா்களில் வரையப்பட்டுள்ள விளம்பரங்களை அழிக்கும் பணியில் அப்பகுதியில் உள்ள உள்ளாட்சி கிராம ஊராட்சி ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

நாகை நகராட்சி மற்றும் பொரவாச்சேரி, மஞ்சக்கொல்லை, சிக்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் பொதுச்சுவற்றில் வரையப்பட்டிருந்த கட்சி விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.