வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பூம்புகாா் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

News image
Updated On :29 மார்ச் 2026, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன், செம்பனாா்கோவிலில் உள்ள அண்ணா சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இவா், இத்தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில், இரண்டாவது முறையாக போட்டியிடுகிறாா். கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற நிவேதா எம். முருகன், தொகுதிக்கு வந்ததும், செம்பனாா்கோவிலில் உள்ள அண்ணா சிலை மற்றும் மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா்.

நிகழ்ச்சியில், திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளா் பி.எம். ஸ்ரீதா், ஒன்றியச் செயலாளா்கள் பி.எம். அன்பழகன், அமுா்த விஜயகுமாா், அப்துல்மாலிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.