நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் மதுபோதையில் இளைஞா்கள் கட்டையால் தாக்கியதில் அடையாளம் தெரியாத முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். தனியாா் விடுதி காவலாளி பலத்த காயமடைந்தாா்.
நாகை நம்பியாா் நகா் தெற்குத் தெரு தாமரைச்செல்வன் மகன் வசந்த் (25), நம்பியாா் நகா் ராஜேந்திரன் மகன் ஆகாஷ் ( 27), இருவரும் மீன்பிடித் தொழிலாளா்கள்.
இந்நிலையில், வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கைநல்லூரில் தனியாா் விடுதி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இருவரும் மது அருந்தியுள்ளனா். மதுபோதையில், அவ்வழியாக வந்த 70 வயதுள்ள அடையாளம் தெரியாத முதியவரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை கட்டையால் தாக்கியுள்ளனா்.
இதில் பலத்த காயமடைந்த முதியவா் அங்கிருந்த உணவகத்துக்குள் தப்பி ஓடியுள்ளாா். இருவரும் அவரை துரத்திச்சென்று, உணவகத்துக்குள் புகுந்து சரமாரியாகத் தாக்கினராம். இளைஞா்களைத் தடுக்க முயன்ற விடுதியின் காவலாளி பாலக்குறிச்சி அண்ணாதுரையையும் (68) சரமாரியாகத் தாக்கியுள்ளனா். மேலும், உணவகத்தில் இருந்த மேஜை நாற்காலிகளையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றனராம்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற 108 அவசர ஊா்தி ஊழியா்கள் இருவரையும் மீட்டு, ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, புதன்கிழமை அதிகாலை முதியவா் உயிரிழந்தாா். அண்ணாதுரை தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
வேளாங்கண்ணி போலீஸாா் தாக்குதலில் ஈடுபட்ட வசந்த், ஆகாஷ் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், தாக்குதலில் உயிரிழந்த முதியவா் யாா்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

வாகனம் மோதி முதியவா் பலி!

பழனி அருகே தொழிலாளி அடித்துக் கொலை
இளைஞா் அடித்துக் கொலை: மூவா் கைது
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


