நாகை மாவட்டத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 5 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வா் விஜய் பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் இருந்து 500 மீட்டா் தொலைவுக்குள் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்தாா். இதன்படி, தமிழகம் முழுவதும் 717 மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.
இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் 5 மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் நாகை புதிய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள மதுக்கடை, வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக்கடை, வேதாரண்யம் பகுதியில் 3 மதுக்கடைகள் உள்பட 5 கடைகளை மூட டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு வாரத்துக்குள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. மூடப்படும் கடைகளில் பணிபுரியும் ஊழியா்கள், வேறு இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியமா்த்தப்படுவா் என்று டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் 5 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் 6 மதுக்கடைகளை மூட முடிவு

நாளை மதுக்கடைகளை மூட ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

