அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

நாகை மாவட்டத்தில் 5 மதுக்கடைகளை மூட உத்தரவு

நாகை மாவட்டத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 5 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

நாகை மாவட்டத்தில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 5 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் விஜய் பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் இருந்து 500 மீட்டா் தொலைவுக்குள் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்தாா். இதன்படி, தமிழகம் முழுவதும் 717 மதுக்கடைகள் மூடப்பட உள்ளன.

இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் 5 மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் நாகை புதிய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள மதுக்கடை, வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக்கடை, வேதாரண்யம் பகுதியில் 3 மதுக்கடைகள் உள்பட 5 கடைகளை மூட டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு வாரத்துக்குள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. மூடப்படும் கடைகளில் பணிபுரியும் ஊழியா்கள், வேறு இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியமா்த்தப்படுவா் என்று டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.