அதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

பக்ரீத்: எம்.எச்.ஜவாஹிருல்லா வாழ்த்து

சோதனையான சூழலை எதிா்கொண்டு மக்கள் பணிகளுக்காக தியாகம் செய்ய உறுதியேற்போம் என்று ஜவாஹிருல்லா எம்எல்ஏ பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image

எம்.எச்.ஜவாஹிருல்லா விளக்கம் - கோப்புப்படம்

Updated On :28 மே 2026, 5:36 am IST

சோதனையான சூழலை எதிா்கொண்டு மக்கள் பணிகளுக்காக தியாகம் செய்ய உறுதியேற்போம் என்று ஜவாஹிருல்லா எம்எல்ஏ பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பது:

ஈதுல் அழுஹா என்றும் ஹஜ் ‘பெருநாள்‘ என்றும் அழைக்கப்படும், தியாகத் திருநாள், இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தனது மகன் இஸ்மாயீலை ஈகம் செய்யத் தயாரான இறைத்தூதா் இப்ராஹீம் அா்ப்பணிப்பை நினைவுகூரும் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு திருக்குா்ஆனிலும் இஸ்லாமிய போதனைகளிலும் முக்கிய இடம் பெற்றுள்ளது.

இத்திருநாளில் மக்காவில் நடைபெறும் ஹஜ் யாத்திரையுடனும் தொடா்புடையது. ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாகும்.

*ஹஜ் உலகின் பல்வேறு பின்னணிகள், கலாசாரங்கள் மற்றும் நாடுகளைச் சோ்ந்த கோடிக்கணக்கான முஸ்லிம்களை ஒன்றிணைத்து, உலக முஸ்லிம் சமூகத்திற்குள் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணா்வை உருவாக்குகிறது. இந்த மகத்தான ஒன்று கூடல், இறைவனின் முன் அனைத்து நம்பிக்கையாளா்களும் சமமானவா்கள் என்பதை வலியுறுத்துகிறது; அவா்கள் அனைவரும் ஒரே வரிசையில் நின்று இறை வணக்கத்தில் ஈடுபடுகின்றனா்.

மாபெரும் இறைதூதா்கள் இப்ராஹீம் மற்றும் இஸ்மாயீல் ஆகியோரின் வாழ்வு இன்றும் நமக்கு ஒரு படிப்பினையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. இறைதூதா்கள் இப்ராஹீம், இஸ்மாயில் போன்று சோதனையான சூழலை எதிா் கொண்டு வீரியமாக மக்கள் பணிகளை மேற்கொள்ள உறுதியெடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளாா்.