கந்துவட்டி வழக்கில் ஒருவர் கைது

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கந்துவட்டி வழக்கில் ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கந்துவட்டி வழக்கில் ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
முத்துப்பேட்டையை அடுத்த மங்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன்(52). இவர் உரிய அனுமதியின்றி வட்டித்தொழில் நடத்தி வந்தாராம். இவரிடம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள வங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த தனபால் ரூ. 3 லட்சம் கடனாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதற்காக கூடுதல் வட்டி செலுத்தி வந்தாராம். இதுதொடர்பான பிரச்னையில் தனபால் அளித்த புகாரின் பேரில், முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து உதயசூரியனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com