நவம்பர் புரட்சி தின நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

திருவாரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், திருத்துறைப்பூண்டி மடப்புரத்தில் காரல்மார்க்ஸ் 200 -ஆவது ஆண்டு விழா
Updated on
1 min read

திருவாரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், திருத்துறைப்பூண்டி மடப்புரத்தில் காரல்மார்க்ஸ் 200 -ஆவது ஆண்டு விழா மற்றும் நவம்பர் புரட்சி தின நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த கருத்தரங்கத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ஐ.வி. நாகராஜன் தலைமை வகித்தார்.
காரல்மார்க்ஸ் நினைவு தின கொடியை தீக்கதிர் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான எஸ்.ஏ. பெருமாள் ஏற்றி வைத்து, காரல்மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு மற்றும் சோவியத் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு அவர் மேற்கொண்ட யுக்திகள் குறித்துப் பேசினார்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. சுந்தரமூர்த்தி, ஆர். குமாரராஜா, சி. ஜோதிபாசு, கே. தமிழ்மணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.என். தங்கராசு, சுப்பிரமணியன், எஸ். சாமிநாதன், எம்.பி.கே. பாண்டியன்,  கே. பாலசுப்பிரமணியன், நகரச் செயலாளர் கே. கோபு, ஒன்றியச் செயலாளர்கள் கே.என். முருகானந்தம், கே.வி. ராஜேந்திரன், எல். சண்முகவேல்  உள்ளிட்ட மாவட்ட, ஒன்றியத்திலிருந்து 500 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com