திருத்துறைப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பாமணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.
வருகிற நவம்பர் மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்து வருகின்றனர்.
பாமணி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு திருத்துறைப்பூண்டி நிலைய தீயணைப்பு அலுவலர் கோ. சேகர்
மற்றும் தீயணைப்பு வீரர்கள் வெள்ள காலத்தில் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டவர்களை, அங்குள்ள பொருள்களைக்கொண்டு வாழைமரம், டிரம் மூலமாக மீட்டு முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.