திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 33 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
நீடாமங்கலத்தில் இரு தரப்பினர் முன்விரோதம் காரணமாக சாலை மறியலில் ஈடுபடப் போவதாகக் கூறி, துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர். எனினும், சாலை மறியலுக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் புதன்கிழமை மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில், போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அண்ணாசிலை பகுதியில் ஒரத்தூர் சந்துரு தலைமையில் 9 பேர் ஒன்றாகக் கூடினர். அவர்களைக் கண்காணித்த போலீஸார், 9 பேரையும் கைதுசெய்து வேனில் ஏற்றி, தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.
இதேபோல், நீடாமங்கலம் ரயில் நிலையம் அருகே நகர் கிராமத்தைச் சேர்ந்த அன்பரசன் தலைமையில், சாலை மறியலில் ஈடுபட முயன்ற 24 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!

கனரா வங்கி லாபம் 10% குறைவு

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் இன்று பகுதியளவு ரத்து!

ஐரோப்பாவின் குரோஷியாவில் ரயில் வழித்தட ஒப்பந்தத்தை வசப்படுத்திய இந்திய நிறுவனம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
