மன்னார்குடி அருகேயுள்ள புள்ளவராயன்குடிகாட்டில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பம் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து அக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஏப்.14-ஆம் தேதி சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, புள்ளவராயன்குடிக்காடு கிராமம் பிரதான சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடியேற்றப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் கட்சிக் கொடிக் கம்பம் சேதப்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்ததையடுத்து, அதே இடத்தில் நீடாமங்கலம் ஒன்றியச் செயலர் புதியவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கட்சிக் கொடிக் கம்பம் சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டித்தும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தெற்கு மாவட்டச் செயலர் வி.த. செல்வம், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைப் பொதுச் செயலர் ஆர். ரமணி, மாவட்ட செய்தித் தொடர்பாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெய்யில்: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்!

பணவீக்க நாயகனின் அதிரடி தொடருகிறது.. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

கார்த்தி - 30 பூஜை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


