நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தேசிய உழவர் தின விழா நடைபெற்றது.
விழாவை, வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ. பாஸ்கரன் தொடங்கி வைத்தார். இதில், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பயிற்சி உதவியாளர் ஜெ.வனிதா, திட்ட உதவியாளர் தெ.ரேகா, முதுநிலை ஆராய்ச்சியாளர் வீ. விஜிலா உள்ளிட்டோர் பங்கேற்று வேளாண்மை குறித்து தனித்தனித் தலைப்புகளில் பேசினர்.
விழாவில், சிறுதானியங்களிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருள்களான பிஸ்கட் தயாரித்தல் குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







