திருத்துறைப்பூண்டி பகுதியில் கஜா புயலால் பாதிப்புக்குள்ளான அனைத்து வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி 11 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கச்சனம், அம்மனூர், வேளூர், கோமல், மணலி உள்ளிட்ட 11 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன்பாக இந்தப் போராட்டம் நடை
பெற்றது.
இப்போராட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட கூரை வீடுகளுக்கு தலா ரூ.10ஆயிரம் வழங்க வேண்டும், சேதமடைந்த தென்னை, மா, பலா, வாழை மரங்களை உரிய முறையில் கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கச்சனத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் கே. மகேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, பாதிப்பு குறித்து முறையாக கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்ததையடுத்து காத்திருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







