பொதுக்காப்பீட்டு பங்கு விற்பனையைக் கைவிட வலியுறுத்தி திருவாரூரில் எல்ஐசி ஊழியர்கள் சார்பில் வெளிநடப்பு மற்றும் வேலை நிறுத்தம் புதன்கிழமை நடைபெற்றது.
2017-ஆம் ஆண்டு முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். ஓய்வூதியத் திட்டத்தில் விடுபட்ட ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். எல்ஐசி நிர்வாகம் மற்றும் மத்திய அரசு ஒப்புக்கொண்ட 5 நாள் வேலைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், காலிப்பணியிடங்களில் எல்ஐசி-யின் வளர்ச்சிக்கு ஏற்ப மூன்று மற்றும் நான்காம் நிலை ஊழியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். பொதுக் காப்பீட்டு பங்கு விற்பனையைக் கைவிட வேண்டும்.
முதல்நிலை அதிகாரிகள் பதவி உயர்வில் புதிதாகத் திணிக்கப்பட்ட தேர்வு முறையைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுத்தி எல்ஐசி முதல்நிலை அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் ஆகியவை வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த வேலை நிறுத்தத்துக்கு தேசிய கள ஊழியர் கூட்டமைப்பும், லிகாய் அமைப்பும் ஆதரவு கொடுத்தன.
இதையொட்டி மார்ச் 28-ஆம் தேதி புதன்கிழமை பகல் 12 மணி முதல் 1 மணி வரை அலுவலக பணிகளைப் புறக்கணித்து வெளிநடப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் எல்ஐசி அலுவலக வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். செயலர் செந்தில்குமார், லிகாய் முகவர் சங்க மாவட்டச் செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கக் கூட்டமைப்புத் தலைவர் அழகிரிசாமி, பொதுக் காப்பீட்டு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கருணாநிதி, முதல்நிலை அதிகாரிகள் சங்கக் கூட்டமைப்பு நிர்வாகி மனோஜ், ஊழியர் சங்கப் பொறுப்பாளர்கள் பூங்குன்றன், நிதீஷ், சண்முகசுந்தர், கமலவடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வங்கதேசத்தில் ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் மீது தாக்குதல்!
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

