அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

அயோடின் நுண்சத்து பற்றாக்குறை விழிப்புணர்வுப் பிரசாரம்

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை அயோடின் நுண்சத்து பற்றாக்குறை விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது. 

Updated On :22 அக்டோபர் 2018, 2:53 am

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை அயோடின் நுண்சத்து பற்றாக்குறை விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது. 
திருவாரூர் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சார்பில், அயோடின் நுண்சத்து பற்றாக்குறை தடுப்பு குறித்து துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  உலக அயோடின் நுண்சத்து பற்றாக்குறை தடுப்பு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மைய பெருந்தலைவர் எஸ்.டி. அண்ணாதுரை தலைமை வகித்தார். இதில், நகர காவல் நிலைய ஆய்வாளர் ச. குலோத்துங்கன் பங்கேற்று விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். 
நிகழ்ச்சியில், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுதுறை மாவட்ட நியமன அலுவலர் செல்வராஜ், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலர் ஆர். ரமேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் கே. திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.