திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை அயோடின் நுண்சத்து பற்றாக்குறை விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது.
திருவாரூர் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சார்பில், அயோடின் நுண்சத்து பற்றாக்குறை தடுப்பு குறித்து துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக அயோடின் நுண்சத்து பற்றாக்குறை தடுப்பு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மைய பெருந்தலைவர் எஸ்.டி. அண்ணாதுரை தலைமை வகித்தார். இதில், நகர காவல் நிலைய ஆய்வாளர் ச. குலோத்துங்கன் பங்கேற்று விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுதுறை மாவட்ட நியமன அலுவலர் செல்வராஜ், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலர் ஆர். ரமேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் கே. திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

குடியரசு துணைத் தலைவா் திருமலையில் வழிபாடு

இந்த நாள் யாருக்கு சாதகம்! தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (29 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் மிதுன ராசிக்கு!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

