கூத்தாநல்லூரில் இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் சனிக்கிழமை மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்தார். சரக்கு வாகன ஓட்டுநரை போலீஸார் கைது
செய்தனர்.
கூத்தாநல்லூர் அருகேயுள்ள தாழைக்குடி தோட்டத் தெருவைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் (34). இவர், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில், லெட்சுமாங்குடிக்கு வந்து கொண்டிருந்தார்.
மேலப்பனங்காட்டங்குடி பிள்ளையார் கோயில் அருகே வரும்போது, பின்னால் வந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்த மோகன்தாஸை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகன ஓட்டுநரான சொரக்குடி, பெத்தபெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ஹாஜா மைதீன் (22) என்பவரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தான் பல்கலை.யில் அட்டகாசம்: கண்ணில் படுவோரை கடித்து குதறும் அணில்!
ரஜினி - 173 படத்திலிருந்து விலகியது ஏன்? சுந்தர். சி விளக்கம்!

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா!
வீடியோக்கள்

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

