நன்னிலம் வட்டத்தில் உள்ள 126 வாக்குச்சாவடி மையங்களில் இரண்டு நாள்கள் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முகாமில், 952 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த முகாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் (பிப். 23, 24) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.
அதன்படி, திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் நன்னிலம், பேரளம், கொல்லுமாங்குடி, பூந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 126 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், திருத்தம் செய்தல் ஆகியவற்றை மேற்கொள்ள சிறப்பு முகாம் 252 அலுவலர்களால் நடத்தப்பட்டது. இந்த முகாம்களை நன்னிலம் வட்டாட்சியர் ஆர். பரஞ்சோதி மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைந்த நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் நன்னிலம் வட்டம் முழுவதும் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி திருத்தம் போன்றவற்றுக்காக 952 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று நன்னிலம் வட்டாட்சியர் பரஞ்சோதி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (30.05.2026) - கும்பம்
இன்றைய ராசி பலன் (31.05.2026) - கன்னி
இன்றைய ராசி பலன் (31.05.2026) - மீனம்
இன்றைய ராசி பலன் (31.05.2026) - மேஷம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


