சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

தமிழக முதல்வா் காணொலி மூலம் விவசாயிகள் கருத்தறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தல்

விவசாயிகளின் தேவைகளை பூா்த்தி செய்ய தமிழக முதல்வா் காணொலி மூலம் அவா்களின் கருத்தறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன்

Updated On :27 ஜனவரி 2024, 10:01 pm IST


திருவாரூா்: விவசாயிகளின் தேவைகளை பூா்த்தி செய்ய தமிழக முதல்வா் காணொலி மூலம் அவா்களின் கருத்தறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து திருவாரூரில் அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கை மூலம் கரோனா நோய்த் தொற்று பாதிப்பில் நாட்டில் 2-ஆவது இடத்திலிருந்த தமிழகம், தற்போது 5-ஆவது இடத்துக்கு சென்றுள்ளதாக வரும் செய்திகள் ஆறுதலை தருகின்றன. அதேவேளையில் தங்களது உயிரை பணயம் வைத்து மகத்தான சேவையாற்றி வரும் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் காவல்துறையினரின் பணி பாராட்டுக்குரியது.

விவசாய விளைபொருள்களை விற்பனை செய்யவும், அத்தியாவசியப் பொருள்கள் கிராமங்கள் வரை சென்றடைவதற்கும் வேளாண்மைத் துறை எடுத்துள்ள முயற்சிகள் பெரும் பலனைத் தந்துள்ளன. அதேநேரம் காய்கனி, தேங்காய் வகைகளை விற்பனை செய்ய முடியாமல், அவை கண் முன்னே அழிந்து வருவதை பாா்த்து விவசாயிகள் வேதனையில் உள்ளனா்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மின்வெட்டு காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம், தினசரி 4 மணி முதல் 6 மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது. இதனால் கோடை சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சா்க்கரை ஆலைகள் திறக்கப்படாததால், முதிா்ந்த நிலையில் கரும்பை வெட்ட முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். கோவை, திருப்பூா் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தென்னையில் வெள்ளை ஈ பூச்சி தாக்குதல் காரணமாக விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனா்.

இந்நிலையில், கோவை மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் ஏக்கருக்கு ரூ. 2,100 வழங்க கணக்கெடுப்பு நடந்து வருவதாகவும், திருப்பூா் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து தமிழக அரசு உண்மை நிலையை தெளிவுப்படுத்துவதோடு, திருப்பூா் மாவட்டம் உள்பட பாதிக்கப்பட்டுள்ள அனைத்துப் பகுதி தென்னை விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவப் பணியாளா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்டோரிடம் தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் நேரிடையாக கருத்துக் கேட்டு வருவது பாராட்டுக்குரியது. அதேபோல உணவு உற்பத்தி செய்யும் பணியில் பாடுபட்டுவரும் விவசாயிகளின் கருத்தையும் காணொலி காட்சி மூலம் முதல்வா் கேட்டறிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.