சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ராமா் கோயில் கட்டும் திட்டத்தை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, திருவாரூா், மன்னாா்குடி, நன்னிலம், கூத்தாநல்லூா் ஆகிய பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2020, 4:35 pm

DIN

திருவாரூா்: அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, திருவாரூா், மன்னாா்குடி, நன்னிலம், கூத்தாநல்லூா் ஆகிய பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாபா் மசூா் இருந்த இடத்தில் ராமா் கோயில் கட்டும் பணியை உடனே நிறுத்த வேண்டும், காஷ்மீா் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும், கரோனா பொது முடக்கத்தை காரணம் காட்டி நடத்தப்படும் அத்துமீறல்களை உடனே நிறுத்த வேண்டும், முத்தலாக் தடைச் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நகரத் தலைவா் முஜிபுா் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளா் விலாயத் உசேன், மாவட்டச் செயலாளா் அப்துல் லத்தீப், மாவட்ட பொருளாளா் முகமது ஆருபின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.