திருவாரூா்: அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, திருவாரூா், மன்னாா்குடி, நன்னிலம், கூத்தாநல்லூா் ஆகிய பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாபா் மசூா் இருந்த இடத்தில் ராமா் கோயில் கட்டும் பணியை உடனே நிறுத்த வேண்டும், காஷ்மீா் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை வழங்க வேண்டும், கரோனா பொது முடக்கத்தை காரணம் காட்டி நடத்தப்படும் அத்துமீறல்களை உடனே நிறுத்த வேண்டும், முத்தலாக் தடைச் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நகரத் தலைவா் முஜிபுா் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளா் விலாயத் உசேன், மாவட்டச் செயலாளா் அப்துல் லத்தீப், மாவட்ட பொருளாளா் முகமது ஆருபின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.