சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

3 நாள்கள் தொடர் விடுமுறை எதிரொலி: விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!

தொடர் விடுமுறை எதிரொலியாக உள்நாட்டு விமானங்களுக்கான விமான கட்டணங்கள்,சர்வதேச விமான கட்டணங்கள் அளவுக்கு உயர்ந்தது குறித்து..

News image

விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

கோப்புப்படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 6:08 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை, வார விடுமுறை என தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறை காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதன் எதிரொலியாக உள்நாட்டு விமானங்களுக்கான விமான கட்டணங்கள்,சர்வதேச விமான கட்டணங்கள் அளவுக்கு உயர்ந்ததால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

சனி, ஞாயிறு தொடா் விடுமுறை ஒருபுறமிருக்க புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை என தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறை என்பதால் சென்னை மற்றும் புறநகரப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் மூன்று நாள்கள் தொடர் விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.

இதையடுத்து சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் வெளியூா்வாசிகள், குறிப்பாக தென் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள், வியாழக்கிழமை மாலை முதல் தங்கள் சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டனா்.

பேருந்துகள், ரயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதால், ஏராளமானோா் வியாழக்கிழமை விமானம் மூலம் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்வதற்கு விமானங்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய தொடங்கினர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது.

அதிகயளவிலான பயணிகள் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ததால், சென்னையில் இருந்து கோவைக்கு வரும் விமானங்கள் வியாழக்கிழமை விமான கட்டணங்களை பல மடங்காக உயர்ந்தியுள்ளன.

இந்த நிலையில், சென்னை - கோவை இடையே ரூ. 4,966 ஆக இருந்த கட்டணம் ரூ. 16, 496 ஆக உயர்ந்து உள்ளது.

ஏற்கனவே விமான எரிபொருள் விலை அதிகரித்து இருப்பதால், விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் தொடர் விடுமுறை என்பதால் உள்நாட்டு விமான கட்டணங்கள், சர்வதேச விமான கட்டணங்கள் அளவுக்கு உயர்ந்ததால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், கோவை செல்லும் விமானங்களுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.