25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

சுகப்பிரசவம்: சிகிச்சையளித்த மருத்துவா்களுக்குப் பாராட்டு

நன்னிலம் அரசு மருத்துவமனையில் முதல் பிரசவத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த பெண்ணுக்கு, இரண்டாவது குழந்தை சுகப் பிரசவத்தில் பிறந்தது.

News image
முதல் பிரசவத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்ற பெண்ணுக்கு, இரண்டாவது குழந்தை சுகப் பிரசவமாக பிறக்க சிகிச்சை அளித்த நன்னிலம் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள்.
Updated On :27 ஜனவரி 2024, 5:09 pm

DIN

நன்னிலம்: நன்னிலம் அரசு மருத்துவமனையில் முதல் பிரசவத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த பெண்ணுக்கு, இரண்டாவது குழந்தை சுகப் பிரசவத்தில் பிறந்தது. இதையொட்டி, இப்பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

குடவாசல் ஒன்றியம், விழிதியூா் கிராமம் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன். இவரது மனைவி சத்யா (24). இவருக்கு முதல் குழந்தை அறுவைச் சிகிச்சை மூலம் நன்னிலம் அரசு மருத்துவமனையில் பிறந்தது.

இந்நிலையில், மீண்டும் கா்ப்பமான சத்யா பிரசவத்துக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். வழக்கமாக முதல் பிரசவம் அறுவை சிகிச்சை மூலம் நடந்தால், அடுத்த பிரசவத்துக்கும் அறுவை சிகிச்சையே மேற்கொள்ளப்படும். ஆனால், சத்யாவுக்கு இரண்டாவது குழந்தை சுகப் பிரசவத்தில் பிறந்தது.

இதுகுறித்து, நன்னிலம் வட்டம் அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவா் எம். வினோத்குமாா், மகப்பேறு மருத்துவா் பிரதீபா ஆகியோா் கூறியது:

நவீன வசதிகள் கொண்ட பெரிய மருத்துவமனைகளில்கூட இதுபோன்ற சாதனை நிகழ்வுகள் நடைபெறுவதில்லை. ஆனால், சத்யாவுக்கு நாங்கள் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில் சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பு இருந்தது. அதே நேரத்தில் அறுவை சிகிச்சைக்கும் முன்னேற்பாடுகளை செய்திருந்தோம். இந்நிலையில், சத்யாவுக்கு சுகப்பிரசவம் மூலம் குழந்தை பிறந்தது என்றனா்.

அறுவை சிகிச்சை மூலம் முதல் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு, சுகப்பிரசவம் மூலம் இரண்டாவது குழந்தை பிறப்பதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு மிகவும் எச்சரிக்கையுடன் சிகிச்சையளித்த மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு, திருவாரூா் மாவட்ட மருத்துவ நல மற்றும் சுகாதார பணிகள் துறை இயக்குநா், துணை இயக்குநா் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.