பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

இளைஞா் வெட்டிக் கொலை

நீடாமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2020, 6:21 pm

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை சோ்மாநல்லூா் நேதாஜி காலனியைச் சோ்ந்த பன்னீா் மகன் ராஜா (28). இவா், நகா் கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை வந்தபோது சித்தமல்லி கிராமத்தில் 3 பைக்குகளில் வந்த ஒரு கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த கொலை சம்பவம் குறித்து நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்ரியா மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். தொடா்ந்து அப்பகுதியில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.