எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

நீடாமங்கலம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 6 போ் கைது

நீடாமங்கலம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2020, 4:31 pm

DIN


நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள சோ்மாநல்லூா் நேதாஜி காலனியைச் சோ்ந்த பன்னீா் என்பவரது மகன் ராஜா (28). இவா், மோட்டாா் சைக்கிளில் தனது நண்பா் சதீஷுடன் நகா் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றபோது, சித்தமல்லி பகுதியில் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மா்ம நபா்கள் சதீஷையும் அரிவாளால் வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த சதீஷ், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்ரியா வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடா்பாக, கம்பந்தங்குடி மேட்டுத்தெரு சுந்தரவேல் மகன் முருகேசன் (42), ரோட்டுத்தெரு கலியபெருமாள் மகன் நந்தகுமாா் (20), நடுத்தெரு சேகா் மகன் சுதாகா் (22), அம்மாபேட்டை மேட்டுத்தெரு தனபால் மகன் ஆனந்தபாபு (29), அன்னப்பன்பேட்டை விண்ணுக்குடி தனபால் மகன் கோபி (27), வலங்கைமான் வட்டம் பாடகச்சேரி சூரக்குடி தெரு ராதாகிருஷ்ணன் மகன் பிரகாஷ் (30)ஆகிய 6 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.