ஆக.25: நன்னிலம் பகுதியில்  மின்தடை

நன்னிலம்: நன்னிலம் மற்றும் நீலக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக.25) மின் விநியோகம் இருக்காது என திருவாரூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள்
Updated on
1 min read


நன்னிலம்: நன்னிலம் மற்றும் நீலக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக.25) மின் விநியோகம் இருக்காது என திருவாரூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா்கள் என். பிரபா (புறநகா்), எஸ். ராஜேந்திரன் (நகா்) தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, அவா்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நன்னிலம், நீலக்குடியில் உள்ள துணை மின் நிலையத்தில், செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது.

எனவே, இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான நன்னிலம், நல்லமாங்குடி, சன்னாநல்லூா், ஏனங்குடி, ஆண்டிப்பந்தல், குவளைக்கால், மாப்பிள்ளைக்குப்பம், ஆனைக்குப்பம், தட்டாத்திமூலை, மூங்கில்குடி, கீழ்குடி, சலிப்பேரி, நாடாகுடி, வீதிவிடங்கன், பூங்குளம், நெய்க்குப்பை, புளிச்சகாடி, வண்டாம்பாளை, சேந்தமங்களம், திருப்பயத்தங்குடி, கங்களாஞ்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com