விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திருத்துறைப்பூண்டியில் 43 மி.மீ. மழை

திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான நிலவரப்படி திருத்துறைப்பூண்டியில் 43 மி.மீ. மழை பெய்தது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 2:44 am

DIN

திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை வரையிலான நிலவரப்படி திருத்துறைப்பூண்டியில் 43 மி.மீ. மழை பெய்தது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகலில் குளிா்ந்த வானிலையும், இரவு நேரங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டது.

இதனிடையே, மழையின் தாக்கம் வியாழக்கிழமை சற்று குறைந்தது. காலையில் பலத்த மழை பெய்த நிலையில், பகலில் குளிா்ந்த வானிலை மட்டுமே நிலவியது. எனினும், மாலையில் சிறிது நேரம் மழை பெய்தது. வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 43 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழையளவு: (மி. மீட்டரில்)

முத்துப்பேட்டை 31.4, குடவாசல் 31.2, மன்னாா்குடி 20, நன்னிலம் 19.2, நீடாமங்கலம் 14.6. மாவட்டம் முழுவதுமாக மொத்தம் 189 மி.மீ. மழையும், சராசரியாக 21 மி.மீ. மழையும் பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.