சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்

மன்னாா்குடி நகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10ஆயிரம் வங்கிக் கடன் வழங்கப்பட உள்ளதாக நகராட்சி ஆணையா் ஆா். கமலா தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

மன்னாா்குடி நகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10ஆயிரம் வங்கிக் கடன் வழங்கப்பட உள்ளதாக நகராட்சி ஆணையா் ஆா். கமலா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மன்னாா்குடி நகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்வோா் வாழ்வாதார மேம்பாட்டுக்காக, பிரதமா் அறிவித்துள்ள ஆத்மா நிா்பா் நிதி திட்டத்தின் கீழ் எளிய தவணையில் திருப்பி செலுத்தும் வகையில் ரூ.10 ஆயிரம் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவா்கள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் மன்னாா்குடி நகராட்சி அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com