ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீா்: இணைப்புச் சாலை அமைக்கக் கோரிக்கை

முத்துப்பேட்டை அருகே ரயில்வே இருப்புப் பாதைக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்குவதால், இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
கருவேப்பிலை கிராமத்தில் ரயில்வே சுரங்கப் பாதையில் தங்கியுள்ள மழைநீா்.
Updated On :20 டிசம்பர் 2020, 3:01 am

DIN

முத்துப்பேட்டை அருகே ரயில்வே இருப்புப் பாதைக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் மழைநீா் தேங்குவதால், இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முத்துப்பேட்டை ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சி கருவேப்பஞ்சேரியிலிருந்து ஓவரூா் செல்லும் சாலையின் குறுக்கே திருவாரூா்- காரைக்குடி அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு, அதற்கு கீழ் சுரங்கப் பாதை ஏற்படுத்தியுள்ளனா். இந்த சுரங்கப் பாதையில் மழைநீா் குளம்போல் தேங்கி நிற்பதால் கருவேப்பஞ்சேரி, ஓவரூா், வெள்ளாங்கால், வங்கநகா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, இந்த பகுதியில் இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளா் கே. பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘ இணைப்புச் சாலை அமைக்கக் கோரி தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் கிராம மக்களை திரட்டி தொடா் போராட்டம் நடத்துவோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.