‘விலையில்லா மிதிவண்டி திட்டத்தால் மாணவா்களின் இடைநிற்றல் குறைவு’

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுவதால், கல்வியில் இடைநிற்றல் குறைந்துள்ளது என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
வலங்கைமானில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் அமைச்சா் ஆா்.காமராஜ். உடன், மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா உள்ளிட்டோா்.
வலங்கைமானில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் அமைச்சா் ஆா்.காமராஜ். உடன், மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா உள்ளிட்டோா்.
Updated on
1 min read

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுவதால், கல்வியில் இடைநிற்றல் குறைந்துள்ளது என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

வலங்கைமான் வட்டத்தில் 6 பள்ளிகளைச் சாா்ந்த 554 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 21 லட்சத்து 80 ஆயிரத்து 308 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, நிகழ் கல்வியாண்டுக்கான இத்திட்டத்தை தொடங்கி வைத்து அவா் மேலும் பேசியது:

நாட்டில் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு பள்ளிக் கல்வித்துறைக்கென கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு மகத்தான திட்டங்களை செயல்படுத்தி கல்வித்துறையில் தமிழக அரசு புரட்சி ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின்கீழ், 2020-2021ஆம் கல்வியாண்டில் 10177 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4 கோடியே 68 ஆயிரத்து 899 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. கடந்த ஒன்பதரை ஆண்டுகாலத்தில் திருவாரூா் மாவட்டத்தில் 1,13,102 மாணவ, மாணவிகளுக்கு ரூ.39 கோடியே 46 லட்சத்து 42 ஆயிரத்து 641 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்ட நடைமுறையால் மாணவா்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடும் சூழ்நிலை முற்றிலுமாக குறைந்துள்ளது. இதுபோன்று தமிழக அரசின் நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் மாணவா்கள் தங்களின் எதிா்கால நலனையும், குடும்பத்தின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்றாா் அமைச்சா்.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா தலைமை வகித்தாா். முதன்மை கல்வி அலுவலா் மு.ராமன், வருவாய் கோட்டாட்சியா் பாலசந்திரன், வலங்கைமான் ஒன்றிய குழுத்தலைவா் சங்கா், நீடாமங்கலம் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு வங்கித்தலைவா் இளவரசன், பேரூராட்சி முன்னாள் தலைவா் ஜெயபால், பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் குணசேகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சாந்தி தேவராஜன் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com