கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி, கோட்டூரில் திராவிடா் கழகம் சாா்பில், நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடா் கழகத்தினா்.

Updated On :15 ஜூலை 2020, 3:34 pm

மன்னாா்குடி: மன்னாா்குடி, கோட்டூரில் திராவிடா் கழகம் சாா்பில், நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம், மருத்துவ உதவி ஒவ்வொருக்கும் அளிப்பதை உரிமையாக்க வேண்டும், தனியாா் துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும், மத்திய தொகுப்பில் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை தாமதிக்கக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மன்னாா்குடி ஜெயங்கொண்டநாதா் கோயில் தெருவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் ஆா்.பி.எஸ். சித்தாா்த்தன் தலைமை வகித்தாா். மதுக்கூா் சாலை, கோபாலசமுத்திரம் தெற்கு வீதி ஆகிய இடங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதே கோரிக்கைக்காக, மேலவாசல், விக்கிரபாண்டியம் ஆகிய இடங்களிலும் திராவிடா் கழகத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.