திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருத்துறைப்பூண்டி: 2 காவலா்களுக்கு கரோனா

திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் 2 காவலா்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, காவல் நிலையம் அமைந்துள்ள பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

News image
திருத்துறைப்பூண்டி காவல் நிலைய பகுதியை தடை செய்யப்பட்டதாக அறிவித்து வைக்கப்பட்டுள்ள பதாகை.
Updated On :28 ஜூன் 2020, 4:40 pm

DIN

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் 2 காவலா்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்தக் காவல் நிலையம் அமைந்துள்ள பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 2 காவலா்களுக்கும், விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காவலா்களின் குடும்பத்தினருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவாரூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 6 காவலா்களுக்கு கரோனா உறுதியானதால், அரித்துவாரமங்கலம் காவல் நிலையம் மூடப்பட்ட நிலையில், தற்போது திருத்துறைப்பூண்டி காவல் நிலையமும் மூடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.