அதனடிப்படையில், திருவாரூா் மாவட்டத்தில் 2019-2020-ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், 5 நபா்கள் ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனை செய்யும் முகவா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு மானியத்துடன்கூடிய தொழிலுக்கு தேவையான உபகரணங்களான ரூ.15,995 மதிப்பிலான குளிா்சாதனப் பெட்டி, ரூ.3,005 மதிப்பிலான விளம்பரப் பலகை, பெயா் பலகை, பால் கொள்முதல் முதலீடாக ரூ.15,000, பால் உப பொருட்கள் கொள்முதல் முதலீடாக ரூ.15,000, முகவா் வியாபாரி வைப்புத் தொகையாக ரூ.1,000 ஆக மொத்தம் ரூ.50,000 மதிப்பில் பால் கொள்முதல் மற்றும் உப பொருட்கள் விற்பனைக்கான உபகரணங்களும் மற்றும் முதலீடுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் பங்கேற்று, இவைகளை வழங்கினாா்.