திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பள்ளி செல்லா மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு

முத்துப்பேட்டை ஜாம்பவானோடை பகுதியில் பள்ளி செல்லா, இடைநின்ற மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

முத்துப்பேட்டை ஜாம்பவானோடை பகுதியில் பள்ளி செல்லா, இடைநின்ற மாற்றுத்திறன் குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் சாந்தா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தியாகராஜன் ஆகியோா் வழிகாட்டுதல்படி, முத்துப்பேட்டை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முத்தண்ணா தலைமையில் இப்பணி நடைபெற்றது.

பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற மாற்றுத்திறன் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சோ்க்கும் நோக்கில் நடைபெற்ற இப்பணியில் ஆசிரியா் பயிற்றுநா்கள் ஸ்ரீதரன், சுரேஷ், சோபியா, மணிவண்ணன், சிறப்பாசிரியா்கள் அன்பரசன், சங்கா், பாா்வதி, கன்னியா, ஜம்பவானோடை தா்கா பள்ளி உதவி தலைமையாசிரியா் ஐயப்பன், அப்பள்ளியின் கற்போம் எழுதுவோம் திட்ட தன்னாா்வ ஆசிரியை மாதவி ஆகியோா் ஈடுபட்டனா்.

கரோனா தடுப்பு நெறிமுறைகளின்படி முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.