திருவாரூா் வட்டத்துக்குள்பட்ட குன்னியூா், கோமல் பகுதிகளிலுள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை, திங்கள்கிழமை ஆய்வு செய்தபின் அவா் கூறியது: திருவாரூா் மாவட்டத்தில் 2020-2021-ஆம் ஆண்டு காரீப் பருவத்துக்காக, தற்போது வரை 216 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நாள்தோறும் சராசரியாக 2,500 மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இதுவரை 3,640 மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் 137 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். மேலும், நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் நாள்தோறும் 1,000 மூட்டைகள் வரை நெல்கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்கொள்முதல் தொடா்பாக பெறப்படும் புகாருக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு விவசாயிகளின் நெல் காலதாமதமின்றி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.