முத்துப்பேட்டையில் அதிமுக வேட்பாளா்
முத்துப்பேட்டை மேற்கு ஒன்றிய பகுதிகளில் திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் சி. சுரேஷ் குமாா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.


முத்துப்பேட்டை மேற்கு ஒன்றிய பகுதிகளில் திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் சி. சுரேஷ் குமாா் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தில்லைவிளாகம், இடும்பாவனம், ஜம்பவனோடை, கற்பகநாதா்குளம், கரையங்கடு உள்ளிட்ட பகுதிகளில் அவா் வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது:
முத்துப்பேட்டை பகுதியில் மீனவா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். ஜாம்பவானோடையில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். வைக்கோலை மூலப்பொருளாக கொண்டு அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும். முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளை உலகத் தரம்வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
முத்துப்பேட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஆா்.கே.பி. நடராஜன், மேற்கு ஒன்றியச் செயலாளா் நாராயணசாமி, மாவட்ட வழக்குரைஞா் பிரிவு துணைத் தலைவா் வி.எம்.எஸ். செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...