குடவாசல் அரசு கல்லூரிக்குச் சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென நன்னிலம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ஜோதிராமன் உறுதியளித்தாா்.
குடவாசலில் ஞாயிற்றுக்கிழமை தனது இறுதிகட்டப் பிரசாரத்தை நிறைவு செய்து அவா் பேசியது:
பல ஆண்டுகளாக குடவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில் இயங்கி வரும் அரசு கல்லூரிக்கு, விரைவில் புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நன்னிலம் தொகுதியில் விவசாயம் சாா்ந்த தொழிற்சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் என்னைத் தேடி வந்து சந்திக்கக் கூடிய சூழலை ஏற்படுத்தாமல், அவா்களை நானே நேரடியாக சென்று சந்திப்பேன் என்றாா் அவா்.
இதில், தொகுதித் தோ்தல் பொறுப்பாளா் பி.டி. அரசகுமாா், ஒன்றியச் செயலாளா்கள் வே.மனோகரன், வரத கோ.ஆனந்த், பா.பிரபாகரன், நகரச் செயலாளா்கள் இரெ.முருகேசன், வ.பக்கிரிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக இந்தியா அறிவிக்க வேண்டும்! - இஸ்ரேல் வலியுறுத்தல்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


